சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் ‘ராங்கி’ படப்பிடிப்பில், அவர் மயங்கி விழுந்ததாக வெளியான தகவலை படக்குழு மறுத்துள்ளது.
‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ராங்கி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கதையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா மயங்கி விழுந்ததாக தகவல் வெளியானது. நாளை த்ரிஷா பிறந்தநாள் கொண்டாடுவதால் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த தகவல் ஒரு வதந்தி என படக்குழு இப்போது விளக்கமளித்துள்ளது.