முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் சார்பாக சமூக அரசியல் நிறைந்த படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன்பிறகு அதியன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார்.
மேலும், சுரேஷ் மாரி இயக்கத்தில் கலையரசன் நடிக்கும் படத்தை நீலம் தயாரிப்பதும் உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், பா. ரஞ்சித் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இதனை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.