2018-ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், சர்கார் என வெற்றியும், அடையாளமும் கிடைத்த படங்கள் அவருக்கு கடந்த ஆண்டில் வாய்த்தது.
இதன் பயனாய் தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
2019-ல் அவருக்கு பெரும் வரவேற்பைக் கொடுக்கப்போகும் படம் எது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஸ்டோன் பெஞ்ச் சார்பாக கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கும் படத்தின் முதன்மை பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.