மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உரையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மோடி இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த்தும் மோடியின் பேச்சுக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன் என மோடி இழிவாக பேசியிருக்கிறார். நாட்டின் மறைந்த பிரதமரை இவ்வாறு விமர்சிப்பது பண்பற்றச் செயல் என அனைவரும் கூறி வருகின்றனர்.
அதேபோல் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜீவ் காந்தியின் வாழ்வு முடியவில்லை. முடித்துவைக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைப்போல் அவர் கொல்லப்பட்டார். பிரதமர் இத்தகைய தரம்தாழ்ந்த விமர்சனத்தில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. வெட்கம்” என்று பதிவிட்டிருந்தார்.