கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு பாகத்தை நிறைவு செய்திருக்கிறது.
பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி முழு வீச்சில் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.
மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தி கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ‘பிக் பாஸ் 3’ பங்கேற்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கமல் நிகழ்ச்சியை தொடங்குவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் பாகத்தில் ஆரவ், இரண்டாவது பாகத்தில் ரித்விகா ஆகியோர் வெற்றிபெற்றனர்.