நேபாளத்தில் புயல் வீசியதில் 25 பேர் பலியாகியுள்ளனர் எனவும் பலர் காயமடைந்து உள்ளனர் எனவும் நேபாள ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த புயல் தாக்கியது. இதில் 25 பேர் பலியாகியதாகவும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து நேபாள மீட்புப் படையினர் கூறுகையில், ”தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பலரது வீடுகள் சேதமடைந்துள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா கூறுகையில், “மீட்பு பணிகள் விரைந்து நடக்க ராணுவத்தினர் திரட்டப்பட்டுள்ளர். பலியானவர்களின் குடும்பத்துக்கு  இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.