ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளைப் பல லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளாதாகச் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராசிபுரத்தை சேர்ந்தவர் அமுதவள்ளி. இவர் செவிலியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவரிடம் தருமபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகித் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வந்த அமுதவள்ளி, அவரது கணவன், ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 8 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் தமிழக டிஜிபி.