சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 6 பேரை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகிய 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் சமீபத்தில் ஒப்புதல் வழங்கினார்.

இதைதொடர்ந்து, அவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சட்டத்துறை இணை செயலாளர் வெளியிட்டுள்ளார்.