தமிழுக்கு அப்பால் 41

“மரணப்படுக்கையில் நான் கிடந்த போது” (As I lay dying) என்பது அமெரிக்க நவீனத்துவ எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படும் வில்லியம் ஃபாக்னர் எழுதிய நாவல் (1930). இவரது மற்றொரு புகழ்பெற்ற நாவல் The Sound and the Fury. As I lay dying நாவலைவிட அது செறிவானதாகவும் கடினமானதாகவும் கருதப்படுகிறது.

As I lay dying பாதி வேடிக்கையும் பாதி வேதனையுமாகச் செல்கின்ற விசித்திரமான நாவல். இதன் சம்பவங்கள் நினைத்துப் பார்க்கும்போது “இப்படியெல்லாம் நிகழக்கூடுமா” என வேடிக்கையாகவும் இருக்கின்றன. அவற்றின் அடியாக இருக்கின்ற பல்வேறு கவலைகள், வறுமை, நல்ல பண்புகள், மோசமான தீய மனநிலைகள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளன. நாவலில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. இவற்றிற்கிடையிலும் இறந்த மனைவியைப் புதைத்தவுடனே தன் அடுத்த மனைவியை அறிமுகப் படுத்துகின்ற குடும்பத் தலைவனின் மனநிலை பிரமாதம்!

இந்த நாவலில் 59 பகுதிகள் உள்ளன. அவை பதினைந்து கதாபாத்திரங்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. முதல் பகுதி டார்ல் பண்ட்ரனால் சொல்லப்படுகிறது. அவனது சகோதரர்கள் கேஷ், ஜுவல். நாவலின் தொடக்கத்தில் இவர்களின் தாய் அடீ பண்ட்ரன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சில நாட்களில் இறந்துவிடுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைக் குடும்பம். 1920களின் காலம். குடும்பத்தில் கொடிய வறுமை.

அடுத்த சில பகுதிகளில் அன்சே (அவர்களின் தகப்பன்), சிறிய தம்பி வர்தமான் (சுமார் 7 வயது சிறுவன்), டூயி டெல் என்ற தங்கை (17 வயது) யாவரும் அறிமுகமாகின்றனர். கேஷ் ஒரு நல்ல தச்சன். தன் தாய்க்கான சவப்பெட்டியை அவள் அடுத்த அறையின் ஜன்னலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே செய்து முடிக்கிறான். ஜுவலும் டார்லும் வெறும் மூன்று டாலர் ஊதியம் கிடைக்கும் ஒரு வேலைக்காக வெர்னான் என்ற நகருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் திரும்பிவருவதற்குள் அடீ இறந்து விடுகிறாள். அவள் இறந்த இரவு பெரும் புயல், மழை.

அவளது கடைசி ஆசை ஜெஃபர்சன் என்ற தன் சொந்த ஊரில் புதைக்கப்பட வேண்டும் என்பது. 15 மைல் தொலைவு என்றாலும் இந்த ஊரிலிருந்து அதற்குச் சரியான பாதை இல்லை. இருந்தாலும் இறந்தவளின் இறுதி ஆசைக்கு மதிப்புக் கொடுத்து ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

குடும்பம் அடீயின் சவத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து ஜெஃபர்சனுக்குப் பிரயாணத்தைத் தொடங்குகிறது. பல சமயங்களில் உணவின்றியும், ஆங்காங்கு தானியம் அடிக்குமிடங்கள் போன்ற இடங்களில் தங்கியும் செல்கிறது.

ஏற்கெனவே கேஷின் கால் உடைந்திருக்கிறது. டெல் திருமணமாகாமலே கர்ப்பமாக இருக்கிறாள். மோசமான வானிலை. மீண்டும் கேஷின் கால் உடைந்து விடுகிறது. வழியில் வெள்ளம் பெருகிய ஆற்றைக் கடக்கும்போது வண்டிமாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மற்றவர்களும் அநேகமாக மூழ்கிவிடுகின்றனர். ஆற்றில் சவப்பெட்டி ஏறத்தாழ அமிழ்ந்தே போகிறது. வர்தமான் ஆற்றில் பார்க்கும் மீனும் செத்துப்போன தன் தாயும் ஒன்று என்று  நினைத்துக் கொள்கிறான். இருப்பினும் வண்டியையும், பிறரையும், சவப் பெட்டியையும் ஜுவல் ஒருவனே தன்னந்தனியனாகக் காப்பாற்றுகிறான். ஜுவல் ஒரு குதிரை வைத்திருக்கிறான். அதன்மீது அவனுக்கு அளவற்ற அன்பு.

அடீயின் பழைய கதை அவளாலேயே சொல்லப்படுகிறது. விட்ஃபீல்டு என்ற மதகுருவின் தொடர்பில் பிறந்த ஜுவல்மீது மட்டும் அவளுக்குப் பாசம். அவன்தான் தன்னைக் காப்பவன் என்கிறாள். ஆனால் தனது பிற நேரிய பிள்ளைகள்மீது பாசம் கிடையாது.

கேஷின் காலை சரிப்படுத்த அதன்மீது சிமெண்டை ஊற்றுகிறான் அன்சே. ஜுவலின் குதிரையை அவனுக்குத் தெரியாமல் விற்று வண்டிமாடுகள் வாங்குகிறான். பல ஊர்கள் வழியாக இந்த ஊர்வலம் செல்லவேண்டி யிருக்கிறது. சவப்பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கிறது. மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள். தங்க இடமும் தருவதில்லை.

கடைசி இரவில் ஜில்லஸ்பீ என்பவனின் பண்ணையில் தங்குகிறார்கள். டார்ல் நாற்றமடிக்கும் பிணத்தை எரித்துவிடலாமென்று அங்கிருந்த வைக்கோல் முதலியவற்றைக் கொளுத்திவிடுகிறான். ஆயினும் ஜுவல் எப்படியோ சவப்பெட்டியைத் தீயிலிருந்து காப்பாற்றிவிடுகிறான்.

ஜெஃபர்சன் ஊருக்கு குடும்பம் வந்து சேர்கிறது. டூயி டெல் தன் கருவைக் கலைக்க மாத்திரை வாங்குவதற்காக முன்பின்தெரியாத ஒருவனுடன் உறவு கொள்கிறாள். ஆனால் அது கருக்கலைப்பு மாத்திரை அல்ல, வெறும் முகப்பவுடர் என்று பின்னால் தெரிகிறது. அவளது பணத்தை அவள் அப்பன் அன்சே தனக்குப் பல்செட் வாங்குவதற்காக எடுத்துக் கொண்டு போய்விடுகிறான். ஊரின் டாக்டர் கேஷின் உடைந்த காலின்மீது சிமெண்ட் ஊற்றியதால் அது அழுகிப்போய்விட்டது என்கிறார். ஜிலெஸ்பீ பண்ணையை டார்ல் கொளுத்தியதற்காக தண்டனையிலிருந்து தப்ப அவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று பொய் சொல்லவேண்டிவருகிறது. அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கின்றனர். அன்சே அடீயின் உடலைப் புதைக்கிறான். குழிதோண்டுவதற்கு கடப்பாறை, மண்வெட்டி முதலியவற்றை ஒரு பெண் கடனாக அளிக்கிறாள். அவளோடு அன்சே காதலில் ஈடுபடுகிறான். தன் பிள்ளைகளுக்கு அவளைத் தன் புது மனைவி என்று அறிமுகம் செய்கிறான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  11. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  12. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  13. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  14. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  15. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  16. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  17. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  18. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  19. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  20. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  21. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  22. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  23. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  24. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  25. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்